பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரம் என்னும் பெயர் வழக்கு 39

'வாரம் பாடுதல்’ என்பது, இசைப்பாடலாற் கட வுளைப் போற்றி வழிபடுதல் என்ற பொருளில் கடைச் சங்க காலத்தே வழங்கி வந்ததாகத் தெரிகிறது. சிலப் பதிகார அரங்கேற்று காதையிலே,

  • தொன்னெறி யியற்கைத் தோரிய மகளிரும்

சீரியல் பொலிய நீரல் நீங்க

வாரம் இரண்டும் வரிசையிற்பாட ’’

என வரும் தொடர்க்கு ஆடி முதிர்ந்தாராகிய மகளிர் நன்மையுண்டாகவும் தீமை நீங்கவும் வேண்டித் தெய்வப்பாடல் பாட ” என அரும்பதவுரையாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் பொருள் கூறியுள்ளார்கள். எனவே இத்தொடரில் வந்த வாரம் என்ற சொல் தெய்வப்பாடல் என்ற பொருளில் இளங்கோவடிகளால் ஆளப்பட்டதென்பது நன்கு பெறப்படும். அன்றியும் சிலப்பதிகாரத்திற் கடலாடுகாதையில் திருமாலேப் பாடும் தேவபாணியும் இறைவனேப் போற்றும் தேவ பாணியும் வருணப் பூதர் நால்வரையும் பரவும் நால் வகைத் தேவபாணியும் ஞாயிறு திங்கள் என்னுந் தெய்வத்தைப் பரவிய தேவபாணியும் கூத்தின்கண் பாடுதற்குரிய இசைப்பாடல்களாகக் கொள்ளப்பட் டன என இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார். பாணி யென்பது பண்ணேடு கூடிய இசைப்பாட்டு. தெய்வத் தைப் பண்பொருந்தப் போற்றிப் பாடிய இசைப்பாடல் தேவபாணியெனப் பெயர் பெறுவதாயிற்று.

" தேவபாணி முதலாக அரங்கொழிசெய்யுள் ஈருக வுள்ள செந்துறை விகற்பங்களெல்லாம் புறநாடகங் களுக்குரிய உருவா வன” என அடியார்க்கு நல்லார் கூறுவர்.

தெய்வத்தை முன்னிலேயில் வைத்துப் பரவிய பாடலே தேவபாணியென வழங்கும் சிறப்புடையதா கும். இதனே,