பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/576

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 55g

இயற்றமிழ்ச் சொற்பொருள் நலங்களும் இசைத் தமிழ் ஒலிநயமும் சிதையா வகை ஒன்றிப் பொருந்தும் முறை யில் அமைந்த இனிய இயலிசைத் தமிழ்ப் பாடல்களே வாரப் பாடல்களாம் என்பதும், முழுமுதற் கடவுளாகிய தெய்வத்தைப் பரவிப் போற்றும் முறையில் மூவர் முதலிகள் அருளிய திருப்பதிகங்கள் இ ங் ங் ன ம் இயலிசை நலம் வாய்ந்த வாரப் பாடல்களாக அமைந் தமை பற்றித் தேவாரம் என வழங்கப்பெற்றன என்பதும் நன்கு துணியப்படும.

செவிப்புலனுக்கு இன்பந்தந்து உணர்வூட்டும் நாதத்தை ஓசை’ எனவும், அவ்வுணர்வுடன் நற் பொருளே அறிவுறுத்தும் முறையில் மக்களது உள்ள த் திற் பதியும் செவிப்புலனும் அனுத்திரளே ஒலி’ எனவும் பகுத்துணர்த்துவர் அறிஞர். உயிர்க்குயிராய் விளங்கும் இறைவன், மேற்குறித்த ஓசை’ ‘ஒலி’ ஆகிய இருவகை ஒலி நுட்பங்களாகவும் பிரிப்பின் றி இயைந்து நின்று உலகங்கள் எல்லாவற்றையும் இயக்கி யருள் கின் ருன் என்பர் பெரியோர் . இவ்வுண்மை யினே ,

  • ஓசை யொ லியெலாம் ஆளுய் நீயே

உலகுக் கொருவணுய் நின் ருய் நீயே'

என வரும் திருத்தாண்டகம் இனிது புலப்படுத்துவ தாகும். அருளாளனுகிய இறைவன் மன் னுயிர்களின் உள்ளத்தையுருக்கி இன்ப அன்பினைப் பெருக்கும் முறையில் இனிய இசையுருவாக விளங்கி நலந் தருகின்ருன் என்றும், இங்ங் னம் இசையுருவாய் விளங் கும் சிவபரம் பொருளைப் போற்றி வழிபாடு செய்தற்கு ஏற்புடைய தாய் இசைத் திறத்திற் சிறந்து விளங்கும் மொழி தமிழ் என்றும், முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் பண்ணுர் இன் தமிழாகவும் பாட்டகத்து இசையாகவும் விளங்கி உள்ள த்திற்கு உவகையளிக்