பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலச் சங்கம் - 19

ர்ைகள். மொத்தத்தில் 4449 புலவர்களுடைய பாடல் கள் தலைச் சங்கத்தில் அரங்கேற்றப்பட்டன. 山命 பாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை என்ற விநோதமான பெயர்களேயுடைய பல பாடல்களே அவர்கள் இயற்றினர்களாம். பாண்டியர்களுக்குள் ஏழு பேர் நூலியற்றித் தலைச்சங்கத்தில் அரங்கேற்றி குனர்கள்.

தலேச்சங்கம் இருந்த மதுரை தென் மதுரை என்றும், இப்பொழுது தமிழ் நாட்டிலுள்ள மதுரை வட மதுரை என்றும் அந்தக் காலத்தில் வழங்கப் பட்டன. 'முரஞ்சியூர் முடிநாகராயர்’ என்ற புலவர் ஒருவர் அந்தத் தலேச் சங்கத்துப் புலவராக இருந்தார். அவருடைய பாட்டு ஒன்று மாத்திரம் இப்பொழுது நமக்குக் கிடைக்கிறது. மற்றப்படி தலைச்சங்கத்தைப்பற்றிய செய்திகளெல்லாம் வெறுங் கதையாக, எந்த விதமான சாட்சிகளும் இல்லாமல், பல நூற்ருண்டுகளாக வழங்கி வருகின்றன.