இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தொண்டைநாட்டுத் திருத்தலப் பயணம் 10 *
மரத்தை உண்டாக்கி அதில் பழம் பழுத்தால் எவ்வளவு இனிப்பாக இருக்குமோ அவ்வளவு இனிமை மிகுந்தவன் எம்பெருமான் என்பது ஆழ்வார் திருவுள்ளம். தக்கான்’ என்பதும் அக்காரக்கனி' என்பதும் இத்தலத்து எம்பெருமானுக்கு ஆழ்வார் சூட்டிய திருநாமங்களாகும்.
அடுத்து, ஆழ்வார் காஞ்சியிலுள்ள திருத்தலங்களைச் சேவிக்கும் நோக்குடன் காஞ்சியை நோக்கி வருகின்றார். காஞ்சியில் இவர் சேவித்த தலங்களைப்பற்றி அடுத்த இயலில் காண்போம்.