பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 38 பரணிப் பொழிவுகள் வாளருள்ளத்தில் ஆதிகால முதலே வாஸளு ரூபமாய்ப் படிந் துன் ளன. அவற்றை விபாவம் முதலியன எழுப்பி விடுகின்றன. என்போலவே எனின், பொருள்களில் அமைந்து கிடக்கின்ற நிலையியல் மின்சாரத்தை (Static electricity) தேய்த்தல் வெளிப் படுத்துவது போல என்று கூறலாம். இவ் விபாவம் முதலியவை ஒருங்கு சேர்ந்து உண்டான சிறப்பியல் செயலால் பூர்வ வாஸ் ஆனக்கு எழுச்சி வருவதைேடு உள்ளம் இராஜஸ், தாமஸ் குணங் கள் அகலப்பெற்று, சுத்த சத்துவமாய்ச் சமைகின்றது. ஆன்மா அஞ்ஞானத் திரையினின்று நீங்கிச் சித்பிரகாச ஆனந்த ரூபமாய் விளங்குகின்றது. இத்தகைய சத்துவதிலே அடைந்த உள்ளத் திற்கு இத்தகைய ஆத்தும் சாட்சியாய்ப் பொருளாகின்ற அநாதி வாலணு ரூபமாகிய காதல் முதலிய பாவமே ரஸம் என்று அறுதி யிடப்பெற்றுள்ளது. சுவைப் பாகுபாடு : சுவைகளின் பாகுபாட்டைப்பற்றிச் சிறிது விளக்கம் கூற எண்ணுகிறேன். நம்முடைய பேச்சும் எழுத்தும் உணர்ச்சியுடன் நின்று விடுகின்றன. ஆகவே, ரஸத்தைப் (சுவையைப்) பாகுபாடு செய்வது இயலாததாகின்றது. சுவை திறைந்த மாம்பழத்தைத் தின்ற ஒருவன் அதன் சுவையைப் பற்றிப் பலவாறு வருணிக்கலாம். ஆளுல், அதன் சுவையை அவன் பிறரால் உணரும்படி செய்தல் இயலாது. பிறரும் அம் மாம்பழத்தைத் தின்று சுவைத்தாலன்றி அதன் சுவையை உணர முடியாது. ரஸ் மும் அந்த வகையைச் சார்ந்ததாகவே கொள்ள வேண்டும். ரஸம் ஒருவருடைய அநுபவம். அதைப் பிறருக்கு எடுத்துக் கூற எவராலும் இயலாது. எனவே, சுவை இலக்கண நூலார் ரஸ் நிலையை வைத்துக்கொண்டு அதனை வகுத்துக் காட்ட முற்படாமல், ரஸத்திற்கு முன்னிலையாகின்ற உணர்ச்சி கண் வைத்து ரஸங்களையும் பாகுபாடு செய்தனர். நம் மனத்தில் தோன்றக் கூடிய எண்ணற்ற உணர்ச்சிகளே ஒன்பதாகப் பிரித் துள்ளனர்; அனைத்தும் இந்த ஒன்பது பிரிவுக்குள்ளேயே அடங் கும் என்பது அவர்கள் கருத்தாகும். இந்த ஒன்பதிற்குப் புறம் பான மனநிலையே இல்லை என்பது அவர்களுடைய துணிபு. உலகப் பொருள்கள் எந்த விதமான மனே பாவங்களை எழுப்பி 18. மனம் தொன்று தொட்டுப் பொருள்களின் நிலையைப் புறக்கணித்து இன்ப துன்பங்களை அநுபவிக்கின்றபொழுது மனத்தில் செதுக்கிவிட்டுப் போன உணர்ச்சி, மீண்டும் அப் பொருள்களைக் காண நேரிடுங்கால் தட்டி எழுப்பப்பெறுகின்றது. இங்ங்ணம் செதுக்குண்டிருக்கும் உணர்ச்சியையே அறிஞர்கள் வாஸ்னே' என்று பெயரிட்டு வழங்குவர்.