பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

? & 4 பரண்விப் பொழிவுகள் தால்தான் அப்பாக்களைப் பன்முறை கேட்டும் படித்தும் இன்புறு கின்ருேம், ஆகவே, இலக்கியத்தில் காணப்பெறும் எல்லாவித உ:ைtச்சிகளும் படிப்போருக்கு இன்பம் அளிப்பதால் அவை பாவும் 'சுவைகள்” என்று வழங்கப் பெற்றன என்றும், உலகியல் திகழ்ச்சிகளின் உணர்ச்சிகள் அங்ங்னம் இன்பம் அளிப்பதில்லை என்றும் கண்டு அறிதல் வேண்டும். பரணிச் சுவைகள் : இதுகாறும் சுவைகளேப்பற்றி அறிந்த கருத்துக்களின் அடிப்படையில் கலிங்கத்துப் பரணியில் சித்தி சிக்கப்பெற்றுள்ள சுவை வேறுபாடுகளே அறிந்து கண்டு மகிழ் வோம். எல்லாச் சுவைகளுமே நம் உள்ளத்தைக் கனிவுபெறச் செய்கின்றன என்பத&ன நாம் உணர்வோம். நூலேக் கையி லெடுத்தவர்கள் யாவரும் சுவையில் ஈடுபட முடியும் என்று கருதுதல் தவறு, நன் ருக மனத்தைச் செலுத்திப் படித்து அடிக் கடிச் சுவைக்கும் இயல்புடையோர்கட்குமட்டிலுமே சுவை சிறிதளவு புலனுகத் தொடங்கும். இரத்தினம் ஓர் உயர்ந்த பொருள் என்பதை நாம் அறிவோம். அதன் பெருமையை, தரத்தினே, எல்லோரும் அறுதியிட்டு அறிய முடிகின்றதா ? இல்லை யன்ருே? அதனைச் சோதித்து அறிந்து பழகியவர்கட்கு மட்டிலுமே அதன் பெருமை புலனுகும். இரங்கூன் கமலம், புஷ்பராகம், வைரம் இந்த மூன்றுக்கும் உள்ள வேற்றுமையை அவர்களே நன்கு அறிதல் முடியும். இத்தகைய கற்களே அறியும் *வாலனே உள்ளிருப்பவர்கட்கே பல தடவைப் பார்ப்பதால் அதனை அறியும் திறம் பெருகும். வாஸ்னே" இல்லாதவர்கள் பல நாட்கள் பல்லாயிரம் இரத்தினங்கனைப் பார்த்தாலும் அவர் கன் மனத்தில் யாதொரு மாறுபாடும் உண்டாக மாட்டாது. காவியத்தில் சுவை காண்பதும் அப்படித்தான். அதிலுள்ள சுவைகனே அறிந்து சுவைப்பதற்கு வழி வழி வரும் வாஸ்னே" வேண்டும். இனி, கலிங்கத்துப் பரணி'யிலுள்ள சுவைகளை ஒவ்வொன் ருகக் காண்டோம். நகைச் சுவை : இயற்கைக்கு மாருக எதையாகிலும் நாம் உணர நேர்ந்தால் அது நம்மிடம் நகைப்பினே விளைவிக்கும். கலிங்கத்துப் பரணியில் பேய்கள் கூழட்டு உண்ணும் பகுதியில் நகைச்சுவை விளக்கும் நிகழ்ச்சிகள் வருகின்றன. ஒரு குருட்டுப் பேயின் உண்கலத்தை ஒரு திருட்டுப் பேய் ஒளித்து வைத்துக் கொள்ளுகின்றது; குருட்டுப் பேய் கையில் கூழ் ஏற்று அருந்து கின்றது. இத் திகழ்ச்சி, ஊணு தரிக்கும் கள்ளப்பேய் ஒளித்துக் கொண்ட கலம்தடவிக்