பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

110

நீலாவென் றெண்ணு மிந்த
நிலையான நினைவென் நெஞ்சில்!
நீலாவென் றியம்பு மிந்த
நெட்டெழுத் திரண்டென் நெஞ்சில்!
நீலாவென் றழைக்கு மிந்த
நிதியான பெயரென் நெஞ்சில்!
நீலாவென் றியங்கு மிந்த
நிகரிலா உருவென் நெஞ்சில்!


உடையிலே உடலை வைத்தாள்;
உலகுபின் பற்றத் தக்க
நடையிலே நலனை வைத்தாள்;
நகில்களைச் சுமந்தி ளைத்த
இடையிலே எழிலை வைத்தாள்:
இமைத்திடுங் குவளை யீர்ங்கண்
கடையிலே கருணை வைத்தாள்;
காதலை வைத்தா ளென்மேல்!

மேலான நூல்கட் கெல்லாம்
மேலாக மேன்மை மேவி,
'நீலா! ஓ நீலா! நீயென்
நெஞ்சிலே நிலைத்து நின்றாய்!
மாலாக வேநீ என்னை
மாற்றினாய்! மணக்கா மற்றான்
ஏலாதிங் கினியென் னாலென்
றெண்ணமிட் டிருந்தான் கண்ணன்