பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

44

நிந்தையில் லாதோன், நேர்ந்து
நிலையாக மேய்த்துக் காக்கும்
மந்தையில் மலிந்த மாட்டை
மறுகவோட் டிப்போய் மற்றச்
சந்தையில் விற்குங் கால்,‘நான்
சாதென லுண்மை யாயின்,
சிந்தையில் செறுக்கில் லான்கை
சேர்ப்பிக்க, எனுமாம் சேர்ந்தே !

‘கல்லொன்றிக் கவினென் றது
காணினும் கருணை கூர்ந்து
புல்லொன்று மாற யென்னைப்
பொட்டலாக் காதீர் ! போற்றும்
சொல்லொன்றும் நல்லோர் தின்று
சுகிக்கவே மா,ப லாவா
யெல்லொன்ற நடுவீ ’ ரென்றே
இயம்புமாம் புன்செய் யேத்தி !

குருவாகக் குரிசி லாகக்
குடிமக னகக் குந்திப்
பரிவாகக் கவிதை பாடும்
பாவல, னகப் பாங்கின்
‘மருவாகி மகிழத் தக்க
மாப்பிள்ளை’ யெனம திக்க
வுருவானீ ருமைவிட் டிங்கென்
னுயிர்வாழ வுளமொப் பாதே !

ஒப்பேதும் தப்பா தொன்றி
யுயிருக்கோ ருயிரா யுள்ளீர் !
இப்போது வானில் மேகம்
இல்லாம லிருக்கு மேனும்
எப்போது மிப்போ தேபோ
லிருக்குமென் றியம்ப லாமோ ?
தப்பாது தரணி தாகம்
தணிக்கும்போ தொன்றுண்” டென்றள்.