பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

16. வேண்டுகோள்

காலத்தில் தழைத்துப் பூத்துக்
காய்த்துப்பின் கனியும் சோலை
யாலத்தி யழைத்தி டாதே,
அழகான பறவை யெல்லாம்
கோலத்தைக் குறித்துக் கூவிக்
கூடல்போல், கூலி யாட்கள்
சீலத்தை யிழைத்திச் செல்விச்
செயல்திறம் தேரச் சேர்வார் !

“காலையி லுணவுட் கொண்டு
கல்லாவில் குந்திக் கையில்
நூலையும் கண்கள் நோக்கின்,
நூம்மையும் பெண்கள் நோக்கிச்
சாலையில் குழுமித் தாமாய்ச்
சரமாரி யாவார், சார்ந்து !
வேலையின் நிமித்தம் வந்த
வேற்றூரார் தேனீர்க்” கென்றள்.

“‘பசிக்காது புசித்தால், பாலும்
பழமும்தே னெனினும் , வாய்க்கு
ருசிக்கா’தென் றுரைத்து நான்நி
ரூபித்தும் வைத்தே னல்லீ !
புசிக்காத தெதுவும் தீங்கு
புரியாதின் றெனைநீ போற்றிக்
கசக்காதே ! இதுதா னந்தக்
காதல்நோய் போலு” மென்றேன்.

“உமிழாது, ‘புவியி லெச்சில்
உள்ளதெ’ன் றுரைப்போ ருண்டோ ?
அமிழாது சுரை,நீ ரில்நம்
அகமது விரும்பிற் றேனும் !
கமழாது முல்லை, காலங்
கண்டது மலர்ந்தா லன்றித்
தமிழோதித் தக்கோ ரானேர்
தவறுசெய் தறியா” ரென்றள் .