பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

77

22. உசுப்பி விடல்

‘ஆலொன்று மறுகொன் றும் மற்
றருகரு கிருந்திங் கந்நாள்
நூலென்று நுவன்ற யாவும்
நுணுகியாய்ந் துணர்ந்து நோற்கப்
பாலொன்றித் தேன்க கலந்த
பான்மையாய்ப் பரவ சித்து
மேலொன்றி நாளும் பேசும்
மேதையாய் மிளிர்ந்த தாம்புல் !

வல்லவன் மனத்தில் பொல்லா
வஞ்சனை, வளர்ந்து விட்டால்,
கொல்லுவோன் கையிற் கொண்ட
கோடரி யதுவா மன்றே ?
சொல்லுவான் சொர்க்கத் துக்கே
சொந்தக்கா ரன்தா னென்றே;
நல்லவற் கிவனல் லாமல்
நஞ்சுவே றவ துண்டோ ?

ஆய்வூக மாற்றல் போன்ற
தனைத்தையு மகத்திற் கொண்டாங்
கோய்வாக வொருநாள் மாலை
யுவந்துவந் தொன்றிக் குந்தி,
சாய்வாக இருந்த ஆலின்
சங்கடம் சலிப்பைச் சார்ந்து,
வாய்வேக மாகச் சொற்கள்
வயணமாய் வழங்கிற் றம்புல்:

“மயிலுக்கு மனையு மானய்!
மங்கல வாழ்த்தி சைக்கும்
குயிலுக்குக் குடிலு மானய்!
குரங்குகள், கும்மி கொட்டிப்
பயிலற்கு மேடை யானய் !
பருதிகாய் கின்ற போது,
வெயிலுக்கு நிழலு மானய்
வித்தக வாழ்வுன் வாழ்வே !

” ’