பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

80

80
‘தப்புக்குத் தப்பிக் கொள்ளத்
தருக்கவா தங்கள் செய்வோர்,
ஒப்பிக்கொள் கின்ற வுண்மை
யுலகிலொன் றில்லை யாகித்
துப்புக்குத் தெய்வத் தைத்தம்
துணைக்கொதுக் கிக்கொண் டுள்ளம்
அப்பிக்கொண் டகற்ற துள்ள
அழுக்கைந்து குவின்டா’ லென்பர் !

பிறக்கவே பெற்றும், பேணிப்
பிறர்க்கிரங் காத மாந்தர்
இறக்கவே யிருந்தும், வாழ்வில்
எய்துவ தெல்லா மெய்தித்
துறக்கவே தோன்ற துள்ள
சுவர்க்கமும் பெறுவா ராயின்,
சிறக்கவே நாமும் காண்போம்
சிவன்பாத” மென்ற தாம்புல் !