98 ல் டாக்டர் ரா. சீனிவாசன் "கேரளாவில் மரம் ஏறுவதற்கு இரண்டு ரூபாய்தான்; இது அநியாயம்" என்றார். "இரண்டு நிமிஷம் கூட ஆகாது; இதற்கா பத்து ரூபாய்?" "தொழில் அப்படி?" "ஸ்கூட்டர் எதற்கு?" "விரைவில் பல வீடுகளுக்குப் போக வேண்டும்; அண்ணா நகர் முதல் அடையாறு வரை கவர் பண்ண வேண்டும்” என்றார். அவரன்றி ஒரு காயும் அசையாது, அவர் தொழில் நிபுணர்; கேட்டதைக் கொடுத்து விட்டோம். 42. பஞ்ச தந்திரக் கதை அவனுக்கு ஒரு வைப்பாட்டி, அவளுக்கு ஒரு பெரிய வீடு கட்டிக் கொடுத்தான். அதனைச் 'சின்ன வீடு' என்று தவறாக் கூறி வந்தனர். அவனை மீட்பது எப்படி? பதிலுக்குப் பதில் என்ற முடிவுக்கு வந்தாள். தெருவில் புதுச் செருப்பு இருந்தது; சிகிரெட் துண்டு இருந்தது. அவள் கணவன் நாகரிகம் உடையவன்; அந்தச் செருப்பு அந்த இடத்தைவிட்டு மறைந்த பிறகு உள்ளே வந்தான். "யார் வந்து போனது?" "உங்களுக்குத் தெரிந்து விட்டதா?”