பக்கம்:பரிசு மழை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 6 டாக்டர் ரா. சீனிவாசன் முன்னுக்கு வரவில்லை. சொந்தமாகத் தனக்கு ஒரு வீடும் இல்லை; ஏன்?" என்று ஒரு வினாவை எழுப்பினார். "மக்கள் நிறையப் பார்க்க, படிக்க விரும்புகிறார்கள்; கருத்துச் சுமையாக இருப்பதை அவர்கள் விரும்புவது இல்லை" என்ற கருத்து வற்புறுத்தப்பட்டது. “எது நல்லது எது வேண்டும் என்பது விவாதம்; திரைப்பட ரசிகர்கள் கருத்துகளைச் சுமையாகக் கருதுகிறார்கள் என்பது தெரிவிக்கப்பட்டது. இதனை எழுத்துக்கும் ஒரு விமரிசனமாகக் கொள்ள முடியுமா? சிந்திக்கத் தக்கது. 18. ரசனை டெல்லி துரிதவண்டி அதில் இடையில் ஏறியவர் இருவர். எத்தனையோ பேர் ஏறுகிறார்கள் இறங்குகிறார்கள். அவர்களில் இவர்கள் இருவர். இவர்கள் எதிரும் புதிருமாக உட்காருகின்றனர். அவர்கள் பொழுது போக்கை இழுத்துப் பிடித்தவர்கள் சிலர். அவர்கள் இங்கே இடம் பிடிக்கிறார்கள். குழந்தைகள் சூழ ஏறுகின்ற குடும்பம்; வழியெல்லாம் பத்திரிகைகளைப் புரட்டிக் கொண்டு படிப்பதைப் போல இந்தக் குழந்தைகள் ஏதாவது மாறி மாறித் தின்று கொண்டே இருந்தன. தின்பது தவிர அந்தக் குழந்தைகளும் அவர்களின் போஷகர்களான பெரியவர் களும் வேறு ஒன்றும் செய்ததாகத் தெரியவில்லை. அவர்களுக்கு அது பொழுது போக்காக இருந்தது; சுவை அவர்களுக்கு சுமை அந்த வண்டிப் பேரறைக்கு; குப்பைகளைப் பெருக்கியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/54&oldid=806897" இலிருந்து மீள்விக்கப்பட்டது