24
பர்மாவில் பெரியார்
"நான் வேறு தோழர்களிடம் வீடு ஏற்பாடு செய்ய அனுப்பியிருக்கிறேனே!" என்றேன்.
"நாங்கள் வீடு பேசி ஒரு மாத வாடகையும் முன் பணமாகக் கொடுத்துவிட்டோம். உடனே அவரை அழைத்துச்செல்லவேண்டும்".
"நான் உங்களை வீடு பார்க்கச் சொல்லவில்லை, பரவாயில்லை, வீடு எங்கே பார்த்திருக்கிறீர்கள்? வசதியான வீடா?" என்று கேட்டேன்.
"மிக வசதியான வீடு," என்று கூறி முகவரியைச் சொன்னார்கள்;
"கீழ் வீடு தானே?" என்று கேட்டேன்.
"இல்லை, இரண்டாவது மாடி" என்றார்கள் அந்தத் தோழர்கள்.
"பெரியார் மாடியில் ஏறிவர முடியாது. கீழ் வீடாக இருந்தால் தான் வசதி! இருக்கட்டும். போன தோழர்கள் வரட்டும். அவர்கள் ஏற்பாடு செய்துள்ள வீடு எப்படி என்று தெரிந்து கொண்டு, பிறகு முடிவெடுக்கலாம்" என்றேன்.
சிறிது நேரத்தில் அந்த நண்பர்கள் வந்தார்கள்.
"மவுந்தாலே வீதியில் ஒரு வீடு ஏற்பாடு செய்திருக்கிறோம். திரைப்படங்கள் வரவழைத்துப் போடுபவர், அவர் தம் அலுவலகக் கட்டிடத்தை நமக்குப் பதினைந்து நாட்கள் ஒதுக்கித் தர இசைந்திருக்கிறார்." என்றார்கள.
"வாடகை எவ்வளவு?" என்று கேட்டேன் நான்.
"வாடகை கிடையாது, அவர் பெரியாரிடம் மிகுந்த மரியாதை வைத்திருப்பவர், தன் வீட்டில் பெரியார் தங்குவதைப் பெருமையாகக் கருதுகிறார்" என்றார்கள்.