பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

பர்மாவில் பெரியார்

நிற்கிறதோ அங்கு உணவுப் பொருள் போய்ச் சேர வேண்டும். அதுவும் 7 மணிக்குள் போய்ச் சேர வேண்டும். அத்தனையும் பார்க்க வேண்டியது என் பொறுப்பு.

கப்பல்களுக்குப் போய்த் திரும்ப பத்துமணியாகி விடும். பிறகு, கப்பல் தலைவர்கள் கேட்ட பொருள்களில் சுங்க அலுவலக அனுமதி பெற்று வழங்க வேண்டிய பொருள்கள் இருக்கும். அரிசி, பருப்பு போன்ற பொருள்கள் சுங்கத்துறை அனுமதியுடன் தான் கப்பலுக்கு வழங்க வேண்டும். அவற்றைப் பங்கீட்டு முறையில் தான் வழங்குவார்கள்.

கப்பலில் வேலை செய்யும் ஆட்கள், பயணிகள் இவர்களின் எண்ணிக்கைப் பட்டியலும், கப்பல் துறைமுகத்தில் நிற்க எண்ணியிருக்கும் நாட்கள் பற்றிய சான்றிதழும் கொடுத்து அப்பொருள்களைப் பெற வேண்டும்.

அதற்குரிய ஆணையுடன் தான் கப்பலில் பொருள்களை ஏற்ற முடியும். 10.30 மணி முதல் 2 மணி வரை அந்த வேலைகளைக் கவனிக்க வேண்டும். 5 மணியளவில் வேலைகளை முடித்துக் கொண்டு, அதற்கு மேல் பெரியார் கூட்ட நிகழ்ச்சிகளில், நானும் கலந்து கொள்வேன், மற்ற தோழர்கள் ஒத்துழைப்பு பெரிதும் இருந்ததால் நான்கு ஐந்து மணி நேரம் மட்டும் நான் பெரியாருடன் இருப்பது போதுமானதாக இருந்தது.

பெரியார் கூட்டங்களில் நான் சிறப்புப் பங்கெடுத்துச் செயல்படுவது பற்றி என் முதலாளி யறிந்தார்.

என் முதலாளி துரைப்பிள்ளை மிகுந்த பக்தியுடையவர். சாதி சமய வேறுபாடில்லாமல் எல்லாத் தெய்வங்களையும்