பக்கம்:பர்மா ரமணி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருட்டுப் பட்டம் 11 துரைசாமி முன்னுல் வந்தான். கடந்ததை கடந்த படி சொல்லு" என்ருர் சபா முதலாளி. "இதோ சொல்லுகிறேன்' என்று தொண்டை யைக் கனைத்துக்கொண்டு ஆரம்பித்தான் துரைசாமி. கான் பகல் சாப்பிட்டுவிட்டுத் திரும்பி வந்துகொண் டிருந்தேன். தியேட்டருக்கு ள் நுழையும்போது ஆண்களுக்கு டிக்கெட் கொடுக்கும் அறை இருக் கிறதே, அதற்குள்ளே ரமணி மட்டும் தனியாக ஏதோ செய்துகொண்டிருப்பதைக் கவனித்தேன். உடனே, ஜன்னல் ஓரமாகப் போய் கின்றுகொண்டு அவன் உள்ளே என்ன செய்கிருன் என்று மெதுவாக உற்றுப் பார்த்தேன். அவன் என்ன செய்தான் தெரியுமா! அந்த அறையில் வடக்கு மூலைக்குச் சென்ருன். மேல் கூரையில் ஏதோ ஒரு பொட்டணத்தைத் திணித்து வைத்தான். அது என்ன பொட்டணமாக இருக்கும் என்று கான் யோசித்துப் பார்த்தேன். புரியவில்லை. சரி, நாம் போய் எடுத்தால் சந்தேகத்துக்கு இடம் ஏற்படும் என்று எண்ணி நேராக ஆபீஸுக்கு வந்தேன். உங்களிட மாவது முதலாளியிடமாவது சொல்லிப் பார்க்கச் சொல்லலாமென்று கினைத்தேன். நீங்கள் அறையில் இல்லை. உடனே முதலாளி அறைக்குச் சென்றேன். அவரிட ம் விஷயத்தைச் சொன்னேன். உடனே அவர் என்னையும் அழைத்துக் கொண்டு டிக்கெட் அறைக்குச் சென்ருர். ரமணி பதுக்கி வைத்த பொட்டனத்தை எடுக்கும்படி என் னிடம் சொன்னர். நான் அதை எடுத்து அவர் கையிலே கொடுத்தேன். அவர் அதைப் பிரித்தார். பிரித்ததும். -துரைசாமி முழுவதையும் கூறி முடிக்கவில்லை. அதற்குள், போதும்! என் மேஜை மேலே அந்தப் பொட்டணம் இருக்கிறது. அதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/15&oldid=807880" இலிருந்து மீள்விக்கப்பட்டது