பக்கம்:பர்மா ரமணி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பர்மா ரமணி காரியமா? ஆல்ை, பெயரை மட்டும் சரியாகச் சொல்ல மாட்டேன் என்கிருன். அதனுல் என்ன? இந்த ஏமாற்று வேலையெல்லாம் எங்களிடமா பலிக்கும்? திருட்டுப் பயல்களே இப்படித்தான்” என்ருர், ஆமாம் சார் அதிலும் இந்த மாதிரிக் கெட்டிக் காரத் திருடனுக்குப் புளுகக் கற்றுக் கொடுக்கவா வேண்டும்? ஆனாலும், அவன் புளுகு எத்தனை கானேக்கு கிலைக்கும் கெட்டிக்காரன் புளுகு எட்டு காளில் தெரியும் என்பார்கள். இந்தப் பயல் புளுகு இன்னும் கொஞ்ச நேரத்திலே தெரியப் போகிறதே! எங்கே அந்த மோசக்காரப் பயல்? கொண்டுவரச் சொல்லுங்கள்; பார்ப்போம்" என்ருர் முதலாளி மோகனரங்கம், "இதோ கொண்டுவரச் சொல்கிறேன்’ என்று கூறிவிட்டு, யாரது? 753, இங்கே வா’ என்று கூப் பிட்டார் சப்- இன்ஸ்பெக்டர். உடனே ஒரு போலீஸ்காரர் அங்கே வந்து கால்கள் இரண்டையும் ஒன்று சேர்த்து ஒரு சல்யூட் செய் தார். உள்ளே போய் லாக்-அப்"பில் இருக்கிருனே ஒரு பொடியன், அவனைக் கொண்டு வா’ என்று உத் தரவிட்டார் சப்-இன் ஸ்பெக்டர். . . . ." போலீஸ்காரர் உள்ளே சென்றதும், சப்-இன்ஸ் பெக்டர் மேஜை அறையிலிருந்த எவர்-ஷார்ப் பேணுவை வெளியே எடுத்தார். 'இதுதானே உங்கள் பேணு?’ என்று மதுரநாயகத்தைப் பார்த்துக் கேட்டார். மதுரகாயகம் அதைக் கையில் வாங்கிப்பார்த் தார். பார்த்ததும், "சந்தேகமில்லை. இது என்னு டையதேதான். மேலே தங்க மூடி, கீழ்ப் பாகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/51&oldid=808249" இலிருந்து மீள்விக்கப்பட்டது