பக்கம்:பல்சுவை விருந்து.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பல்சுவை விருந்து

அழகு என்பவளின் இருப்பிடங்களைக் காட்டும் கவிதை இது: சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்;

திருவிளக்கிற் சிரிக்கின்றாள்; நாரெ டுத்து நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வளைவில்

நாடகத்தைச் செய்கின்றாள்; அடடே செந்தோட் புற்த்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்

புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய் நிறத்தினிலே என்விழியை நிறுத்தினாள்; என்

நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்." இதில் கட்புலப் படிமங்களும் (சிறு குழந்தை விழி, திருவிளக்கு நன்செய் நிறம்), இயக்கப் புல படிமங்களும் (மலர் தொடுப்பாளின் விரல் வளைவின் அசைவு, உழவனின் புது நடை) அமைந்து இருப்பதைக் காண்க.

இந்தப் படிமங்கள் கவிஞன் உள்ளத்தில் இடம் பெற்றது போல் படிமங்கள் அமைந்த பாடலும் நம் உள்ளத்தில் நிலை யான இடம் பெற்று விடுகின்றது.

அண்டங்கள் கோடி கோடி அனைத்தையும் தன்னகத்தில் கொண்ட ஒரு பெரும் புறத்தில் கூத்தாடுகின்றது காற்று. அது தென்றலாய் உருவெடுப்பதை அடியிற் காணும் பாடற் பகுதிகளில் காணலாம்.

பொதிகைமலை விட்டெழுந்து சந்த னத்தின்

புதுமணத்தில் தோய்ந்துபூந் தாது வாரி நதிதழுவி அருவியின்தோள் உந்தித் தெற்கு

நன்முத்துக் கடலலையின் உச்சி தோறும் சதிராடி, மூங்கிலிலே பண் ைழுப்பித்

தாழையெலர்ம் மடற்கத்தி சுழற்ற வைத்து முதிர்தெங்கின் இளம்பாளை முகம்சு வைத்து

முத்துதிர்த்துத் தமிழகத்தின் வீதி நோக்கி;

43. அழகின் சிரிப்பு.