பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

பல்லவர் வரலாறு



(8) மண்டபப்பட்டு

இது புதுவைக்கு அடுத்த சின்னபாபு சமுத்திரம் என்னும் புகைவண்டி நிலையத்திற்குத் தெற்கே இரண்டு கல் தொலைவில் உள்ளது. கல்வெட்டு குகைவாயிலில் பொறிக்கப்பட்டுள்ளது. இதுவே, ‘கல், மரம், உலோகம், சுண்ணாம்பு இல்லாமல் பல்லவன் கோவில் அமைத்தான் என்பதை உணர்த்தும் கல்வெட்டாகும். எனவே, இக் கோவிலே மகேந்திரன் அமைத்த முதல் கோவிலாக இருக்கலாம்.

இக் கோவிலில் மூன்று உள்ளறைகள் உள்ளன. அவை பிரமன், திருமால், சிவன் என்னும் மூவர்க்கும் உரியன. காவலர் தடிகளில் பாம்புகள் சுற்றிக் கொண்டிருப்பதாகச் செய்துள்ளது கவனித்தற்குரியது.

(9) திருச்சி மலைக்கோவில்

திருச்சிராப்பள்ளிக் குன்றின் நடுவில் குடைந்து அமைத்த சிவன் கோவில் சிறந்த வேலைப்பாடு கொண்டதாகும். இதன் மேல்புறச் சுவரில் ஏழடிச் சதுரமுள்ள இடத்தில் கண்ணையும் கருத்தையும் ஈர்க்கும் பதுமைகள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் நடுவணது கங்காதரனைக் குறிப்பது. அதன் முக ஒளியும் நிற்கும் நிலையும் காணத்தக்கவை. கங்கை அணிந்த சிவபெருமானே எதிரில் நிற்பது போன்ற காட்சியை அச் சிலை அளித்து நிற்றல் வியப்பினும் வியப்பே! அச் சிலை, சிவபிரானது சடையிலிருந்து விழும் கங்கையை வலக்கையில் தாங்கியும் பூணுலாகப் போட்டுள்ள பாம்பின் தலையைப் பிறிதொரு வலக் கையால் பிடித்தும், கண்மணிமாலையை இடக்கை ஒன்றில் பிடித்தும், மற்றோர் இடக்கையை இடுப்பில் வைத்தும் நிற்கின்ற காட்சி கண்டுகளிக்கத் தக்கதாகும். இச்சிலையின்வலக்காலின்கீழ் முயலகனைக்குறிக்கும் சிறிய கற்சிலை ஒன்று இருக்கிறது. சிவனைச் சுற்றிலும் அடியார் நால்வர் வணங்குதல் போலவும், மேலே யாழோர் (கந்தர்வர்) இருவரும் சிறிய மனிதன் ஒருவனும் மிதத்தல் போலவும் சிலைகள்