46
绍。
பல வகை விளையாடல்கள்
புகழுடன் அவன் மார்பி லிருந்து
பொருந்தக் கூந்தல் முடிச்சவளாம்;
உத்தமி யாகிய துரோபதை யம்மனின்
சித்திரப் பந்தடி பாடவே
அத்திமுகக் கண பதியே, உன் இரு
அடிமலரைத் தந்தாளுவாய்.
சித்திரப் பதுமை போலவே துரோபதை
வெற்றியு டன்யந்தை அடிக்கவே, தேவலோ கத்துள்ள தேவ ஸ்திரீகளும்
சிறக்கப் பந்தெடுத் தெறியவே, உத்தமி கையில்ை அடிக்கும் பந்தது உயரக் கிளம்பிப் பரியவே, சத்திய பாமையும் ருக்மிணி யும்.அதைக்
தடுத்தெடுத்ததை எறியவே, கத்தைக் குழலது அவிழ்ந்து சரிந்து கனத்த மார்பில் புரளவே, காம்பரிந் திட்ட மலர் அரும்புகள்
கசங்கி எங்கிலும் சிதறவே, வச்சு முடிச்சிட்ட தலேஜோடிப் பெல்லாம்
வாகில்லாமல் கல்யவே, - மன்னன் துருபத ராஜன் மகளும்
மகிழ்த்தொருடந் தடிச்சாளாம்.
3. முத்து முத்தாய் வேர்வை நெத்தியிலிருந்து
முகத்தின் வழியாய் ஒழுகவே, முன்னே எழுதிய கண்ணின்மைத் திலகம்
முத்தும் கரைஞ்சு வழியவே, ரந்தினக் கம்மல் ஜிழிக்கி முருகோடு
சித்திரக் கோசுமுன் ஜொலிக்கவே;
முத்துமுக் குத்தியும் நத்துப்புல் லாக்குடன்
...மூணுலோ கம்.விலே மதிக்கவே,