பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

வேலை செய்பவன் முகத்தில் நான்கு சிட்டுக் குருவிகள் மோதின.

அவன் கோபத்தோடு கல்லெடுக்கக் கையை நீட்டும்போது கையில் நான்கு சிட்டுக் குருவிகள் கொத்தின. அவன் நிமிரும் போது கன்னத்தில் கொத்தின. குனியும்போது தலையில் கொத்தின.

இப்படி ஒவ்வொரு அரண்மனை வேலைக்காரரைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான குருவிகள் சூழ்ந்து கொண்டு தொல்லை கொடுத்தன.

தோட்டக்காரர்கள் செடிகளுக்கு நீர் ஊற்ற முடியவில்லை. சேடிகள் பூப்பறிக்க முடியவில்லை. சமையல்காரர்கள் அடுக்களையில் வேலை செய்ய முடியவில்லை. காவல் வீரர்கள் பாராக் கொடுக்க முடியவில்லை.

அமைச்சர்கள் அரண்மனைக்குள் நுழை யவே முடியவில்லை.

அரண்மனை முழுவதும் ஒரே கூச்சலும் கூக்குரலும் அழுகுரலும் நிறைந்தன. அரண்மனையைச் சுற்றிலும் சிட்டுக் குருவிகளின் ஆங்காரமான போர்க்குரல்.