பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நி3. இiாண்டிாதவை . . . . . . S S S S S 0 L S C S S S S S S S S S S C C C S S S C 9 பாபிலோனிய - சுமேரியப் படைப்புக் கதைகள் பாபிலோனிய மடைபுேக் கதை: முதலில் பாபிலோனிய - சுமேரியப் படைப்புக் கதையைக் காண்போம். பாபிலோனியாவின் பண்டையத் தலைநகரான நிணிவேயை ஜார்ஜ் ஸ்மித் 1873-ல் அகழ்ந்து, ஆராய்ந்தபொழுது அஷ9ர்பானிபால் (சுமார் கி.மு. 2000) என்ற அரசனின் காலத்தில் எழுதப்பட்ட சுட்டமண் ஒட்டுச் சாசனங்கள் கிடைத்தன. அவற்றில் படைப்புக்கதை எழுதப்பட்டுள்ளது. அச்சுட்டமண் ஓடுகளின் வாசகத்தை எல்.டபிள்யூ. கிங் என்ற ஆய்வாளர் படித்து படைப்பு பற்றிய ஏழு ஒடுகள் என்னும் நூலை’ எழுதியுள்ளார். அந்நூலில் காணப்படும் செய்திகளை அடிப்படையாகக் கொண்டே நாம் இக்கதையின் போக்கைக் கூறுவோம். இப்பிரபஞ்சத்தின் ஆரம்ப காலத்தில் கடல் மட்டுமே இருந்தது. மேலே இருக்கும் வானத்திற்கும், கீழே இருக்கும் பூமிக்கும் பெயர்களிடப்படவில்லை. இவற்றின் தந்தை அப்ஸ9; தாய் தியாமத். தரை இன்னும் உருவாகவில்லை. சேறும் இல்லை. அவற்றின் விதியும் நிர்ணயிக்கப்படவில்லை. கடலில் ஒர் அசைவு உண்டாயிற்று. பல தேவதைகள் நீரிலிருந்து வெளிவந்தன. லச்மூ' தேவனும், லச்சாமூ' தேவியும் வெளிவந்தனர். பின்னர் அன்ஷார் தேவனும் கிஷார் தேவியும் நீரினின்று எழுந்தனர். பின்னர் 'அணு' என்னும் வான தேவன் உதித்தான். அவனுடைய மனைவி அனாது. 'இயா இதன்பின் தோன்றினான். அவனே எல்லாத் தேவர்களிலும் அறிவு மிக்கவனாகவும் வலிமை மிக்கவனாகவும் இருந்தான். அவனுக்குச் சம்மானவன் இல்லை. அவன் சமுத்திர ராஜனாகவும், பூமியின் மன்னனாகவும் இருந்தான். அவனுடைய தேவி "டாம்கினா பூமியின் தேவியாக இருந்தாள். இவ்வாறு தேவர்களும் தேவியர்களும் தோன்றி, வலிமையும் புகழும் பெற்றார்கள். அப்ல9வும், தியாமத்தும் இருளடர்ந்த கடலில் குழப்பத்தினுள் வாழ்ந்தார்கள். தங்களது வழித்தோன்றல்களான தேவர்கள் பிரபஞ்சத்தைத் தங்கள் ஆளுகைக்குட்படுத்தி, குழப்பத்தில் ஒழுங்கை நிலைநாட்ட முயலுவதைக் கண்டு மூலப்பிதாவும், மூலமாதாவும் கவலையுற்றனர். தியாமத் தன்மீது அடித்துக்கொண்டு புயல்களைத் தோற்றுவித்தாள். -