பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெல், தினை முதலான தானியங்களிலிருந்தும் மது பானங்கள் உண்டாக்கப்பட்டன. இவற்றிற்குத் தோப்பிக்கள் என்று பெயர் கூறப்பட்டது. இற்றை வீடுகளில் காய்ச்சினார்கள். 'இல்லடு கள்ளின் தோப்பி' (பெரும் பாண், 142) 'துகளற விளைந்த தோப்பி' (அகம், 205) சாடிகளில் தோப்பிகள் காய்ச்சப்பட்டன. 'வல்வாய்ச் சாடியின் வழைச் சற விளைந்த வெந்நீரரியல் விரலலை நறும் பிழி' (பெரும்பாண், 281) என்று கூறப்படுகின்றது. 'தினைக் கள் உண்ட தெளிகோல் மறவர்' (அகம், 284:8) என்று தினையரிசிக்கள் கூறப்படுகின்றது.

மலை நாடுகளில் இருந்த குறவர் அங்குக் கிடைத்த பொருள்களிலிருந்து மதுவை உண்டாக்கிக் கொண்டார்கள்' மலையுச்சியில் மலைப்பாறைகளில் மலைத் தேன் கிடைத்தது' மலைகளிலும் மலைச் சாரல்களிலும் பலா மரங்களும் பலாப் பழங்களும் கிடைந்த மலைகளில் மூங்கில் புதர்கள் வளர்ந்தன. குறவர் பலாச் களைகளிலிருந்து ஒரு வகையான மது பானத்தை உண்டாக்கினார்கள். 'தீம்பழப் பலவின் சுளைவிளை தேறல்.' (அகம், 128:3, 182:3) மூங்கிற் குழாய்களில் மலைத் தேனப் பெய்து வாயை யடைத்து நிலத்தில் புதைத்து வைத்து ஒருவித மதுபானத்தையுண்டாக்கினார்கள். 'வேய் பெயல் விளையுள் தேக்கட்டேறல் குறைவின்றிப் பருகி நறவு மகிழ்ந்து .' (மலைபடு கடாம், 171-172) (வேய்-மூங்கில்.) 'திருந்தமை விளைந்த தேக்கட் டேறல்.' (அமை-மூங்கில்) (பாலைபடு, 52.3), 'நிலம் புதைப் பழுநிய மட்டின் தேறல்' (புறம், 120:12), 'வாங்கு அமைப் பழுநிய தேறல்.' (புறம், 129:2) (அமை -மூங்கில்) 'ஆம் பணை விளைந்த தேக்கட்டேறல்' (அகம், 368:14) (பணை-மூங்கில்). 'அமைவிளை தேறல் மாத்திய கானவன்.' (சிலம்பு, 27:217) பாரியின் பரம்பு மலையில் இருந்தவர்களும் மூங்கிற் குழையில் தேனைப் பதப்படுத்தி மதுவாக்கி உண்டனர். 'நிலப் புதைப் பழுதிய மட்டின் தேறல்.' (புறம், 120:12)

மலைவாழ் குறவர் பலாச் களையையும் தேனையும் கலந்து மூங்கில் குழையில் பெய்துப் பதப்படுத்திய மதுவை உண்டு மகிழ்ந்தனர்.

107