'தந்நாட்டு விளைந்த வெண்ணல் தந்து
பிறநாட்டு உப்பின் கொள்ளை சாற்றி
....................................................................
உமணர் போகலும்'
(தந்நாடு -உப்பு வாணிகரின் மருதநிலம்; பிற நாடு உப்பு விளையும் நெய்தல் நிலம்: உமணர்-உப்பு வாணிகர்)
நெய்தல் நிலத்து முதுமகள் ஒருத்தி தன் உப்பளத்தில் விளைந்த உப்பை மாற்றி நெல் சொண்டுவரச் சென்றாள் என்று கல்லாடனார் கூறுகிறார். 'ஆயும் உப்பை மாறி வெண்ணெல் தரீஇய உப்பு விளை கழனிச் சென்றனள்?' (குறும். 269: 4-6)
(ஆய்-அன்னை, தாய்; தரீஇய-கொண்டுவர )
ஊர்த் தெருவுகளில் உப்பு விற்ற உமணப் பெண் உப்பை நெல்லுக்கு மாற்றினதை அம்மூவனார் கூறுகிறார் .
'கதழ்கோல் உமணர் காதல் மடமகள்
சில்கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி
நெல்லின் தேரே வெண்கல் உப்பெனச்
சேரிவிலை மாறு கூறலின்.'
(சேரி-தெரு; விலைமாறு-பண்ட மாற்று)
'நெல்லும் உப்பும் நேரே, ஊரீர்
கொள்ளிரோ வெனச் சேரிதொறும் நுவலும்'
உப்பை நெல்லுக்கு மாற்றிய உப்பு வாணிகர் தமக்குக் கிடைத்த நெல்லைச் சிறு படகுகளில் ஏற்றிக்கொண்டு கழிகளில் ஓட்டிச் சென்றதை கடியலூர் உருத்திரன் கண்ணனார் கூறுகிறார்.
'குறும் பல்லூர் நெடுஞ்சோணாட்டு
வெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றி
நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி'
15