பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடலில் உண்டான முத்துக்களும் சங்குகளை அறுத்து உண்டாக்கின வளைகளும், கப்பல் வாணிகர் கொண்டு வந்த நவதானியங்களும், மீன்களை உப்பிட்டுப் பதப்படுத்திய உப்புக் கண்டங்களும் (கருவாடு) ஆகியவற்றை நாவாய்களில் ஏற்றிக்கொண்டு போய் அயல் நாடுகளில் விற்று அங்கிருந்து குதிரை முதலான பொருள்களை ஏற்றிக் கொண்டு வந்ததைக் கூறுகிறார்.

'முழங்கு கடல் தந்த விளங்குகதிர் முத்தம்
அரப் போழ்ந் தறுத்த கண்ணேர் இலங்குவளை
பரதர் தந்த பல்வேறு கூலம்
இருங்கழிச் செறுவிற் றீம்புளி வெள்ளுப்புப்
பரத்தோங்கு வரைப்பின் வன்கைத் திமிலர்
கொழுமீன் குறை இய துடிக்கட் டுணியல்
விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுதர்
நனந்தலைத் தேஎத்து நன்கலம் உய்ம்மார்
புணர்த்துடன் கொணர்ந்த புரவியோடனைத்தும்
வைகல் தோறும் வழிவழிச் சிறப்ப.'

(315-324)

கொற்கை

மருங்கூர்ப் பட்டினத்துக்குத் தெற்கே கொற்கைக் குடாக் கடலும் அதன் மேற்குக் கரையில் கொற்கைப் பட்டினமும் இருந்தன. கொற்கையை பெரிப்ளூஸ் என்றும் கிரேக்க நூல் கொல்கிஸ் (Kolklus) என்று கூறுகின்றது. தாலமியும் இதைக் கூறுகிறார். கொற்கைக் குடாக் கடல் அக்காலத்தில் நிலத்தின் உள்ளே ஐந்து மைல் ஊடுருவியிருந்தது. இங்கு முத்துச் சிப்பிகளும் சங்கு வளைகளும் உண்டாயின. கொற்கை முத்து உலகப் புகழ்பெற்ற கொற்கைக் குடாக் கடலில் அக்காலத்தில் தாமிரபரணி ஆறு சென்று விழுந்தது. அந்த ஆற்றின் கரைமேல் கடற்கரைப் பக்கத்தில் பேர்போன கொற்கைப் பட்டினம் இருந்தது. இங்குப் பாண்டிய இளவரசன் இருந்தான். கி.பி. 10-ம் நூற்றாண்டுக்குப் பிறகு கொற்கைக் குடாக் கடல் மண் துார்ந்துடைய மறைந்து போய் இப்போது நிலமாக மாறிவிட்டது. கொற்கைக் குடாக் கடல் நிலமாக மாறிப் போனதற்குக் காரணம்,

86