பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

99


துணைபுண ரன்னத் தூ நிறத் தூ வி
இணையனை மேம்படப் பாயணை யிட்டுக்
காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்
தோடமை து மடி விரித்த சேக்கை

மூட்டுவாய் இனிது பொருந்த நூலிழையிற்கோத்த முத்துச் சரங்களை அந்தத் தந்தக்கட்டிலின் நாற்புறமும் சாளரம் போல் (சாலேகம்) இடைவெளிவிட்டு நேராகத் தொங்க விட்டிருத்தலையும், கட்டிலின் அமைப்பையும் கச்சுப் பட்டைகளாற் கட்டப்பட்டிருந்த விதத்தையும், படுக்கை விரிப்பையும், மலர்கள் தூவியிருந்தலையும் இப்பகுதி விளக்கும்போது பழந்தமிழர் - உள்ளலங்காரத் துறையிலும் சிறந்திருந்ததை அறிய முடிகிறது.

கடவுளர் கோயில் கட்டடங்கள்

அரசர்தம் அரண்மனைக் கட்டடக் கலையைப்போல் கடவுளர் கோயிற் கட்டடக் கலையைப் பற்றி இனிக் காணலாம். கடவுளர் தொடர்பான தமிழ்நாட்டுக் கோயிற் கட்டடக் கலையில் படிப்படியான வளர்ச்சி நிலைகள் உள்ளன என்கிறார் பேரறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி.20

(அ) மரத் தளிகள் (மரத்தாற் கட்டிய கோயில்கள்)
(ஆ) செங்கல் சுண்ணாம்பு மரம் இணைந்த கட்டடக் கோயில்கள்
(இ) குகை - குடைவரைக் கோயில்கள்
(ஈ) கற்றளிகள் (கல்லால் கட்டப்பட்ட கோயில்கள்)
(உ) மண்தளிகள் (மண்ணால் கட்டப்பட்ட கோயில்கள்)

பெரும்பாலான மலைநாட்டுக் (இன்றைய கேரளப் பகுதி) கோயில்கள் திருக்குற்றாலம் - சித்திரசபை, சிதம்பரம் சபாநாதர் மண்டபம் ஆகியவை முழுமையாக