பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

103


மலையிலுள்ள கற்கோயிலுமே முதன்முதலில் கட்டப்பட்டன. இவற்றின் வயது இருநூறு ஆக இருக்கலாம்.

கல்வெட்டுக்களில் இருந்தும் சாசனங்களில் இருந்தும் பிற்காலச் சோழர்கள் பல செங்கல் தளிகளைக் கற்கோயில்களாக மாற்றிக் கட்டியதை அறிகிறோம். 40

பின்னாளில் கற்கோயில்களே பெரு வழக்கமாயிற்று. திருவரங்கம், தில்லை, மதுரைக் கோயில்களின் பெரும்பகுதிகள் இத்தகைய கற்கோயில்களாகவே கட்டப்பட்டு அர்த்த மண்டபம், மகாமண்டபம், ஆயிரங்கால் மண்டபம், கருவறை, திருச்சுற்றுக்கள் என்னும் அமைப்புடன் சிறப்பாக விளங்கி வருகின்றன என்பதைக் காண்கிறோம்.

மாடக் கோயில்கள்

ஒன்றின் மேல் ஒன்றாக ஒன்பது நிலைகளை உடைய மாடக்கோயில்களைச் சிற்பசாஸ்திரங்கள் விவரிக்கின்றன, யானை முதுகு போல் மேற்பகுதி அமைந்த கோயில்கள் தூங்கானை மாடக்கோயில்களாம். ஆனால் இக்காலத்தில் ஒன்பது நிலைகளும் நிறையக் கட்டப்பெற்ற கோயில்களைக் காண்பது அரிதாயுள்ளது.41

இரண்டு அல்லது மூன்று நிலைகள் உள்ள கோயில்களே காணப்படுகின்றன.

கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்கு முன்னரே - அதாவது பல்லவர் காலத்துக்கு முன்னரே இம்மாடக் கோயில்கள் செங்கல்லினால் அமைக்கப்பட்டவை. அவை அழிந்து பட்டன.

திருமங்கையாழ்வார் தமது பெரிய திருமொழியில் 42<\sup> திருநாங்கூர் மணிமாடக் கோயிலைப்பற்றிக் குறிப்பிடுகிறார். இத்திருநாங்கூர் என்பது தஞ்சை மாவட்டம் சீர்காழிக்குக் கிழக்கே ஐந்து கல் தொலைவிலுள்ள ஒரு சோழ நாட்டுத் திருப்பதியாகும்.