பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்

சங்குக்கான மரம்

சந்தனமரம், யானைத் தந்தம், வன்னி வேங்கை, தேக்கு, ஆல், அரசு, கிச்சிலி, கருங்காலி ஆகியவை சங்கு செய்யச் சிறந்த மரங்களாகும். இவற்றில் தேக்கு வேங்கை ஆகிய மரங்கள் அனைவருக்கும் உரியவையாகும். 59

சங்கு வைக்கும் முறை

இரண்டு முழ நீளம் அகலமுள்ள இடத்தைச் சமன் செய்து நல்ல நேரம் பார்த்து சங்கை நீராட்டித் தூய்மைப் படுத்தி, மஞ்சள் குங்குமம் சந்தனம் இட்டு மலர் தூவி வழிபட்டுச் சமன் செய்யப்பட்ட நிலத்தில் நிறுத்த வேண்டும்.

சங்கு வைக்க ஏற்ற காலம்

சங்கு வைப்பதற்கு ஆவணி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்கள் சிறந்தவை. மேற்படி மாதங்களில் வளர்பிறைக் காலங்களில் வானத்தில் மாசு மறுவற்று கதிரவன் விளங்கும் நாட்களாக இருக்க வேண்டும். புதன், வியாழன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களும் சங்கு வைக்க மிகவும் சிறந்தவை. அமாவாசை முதல் பிரதமை, சஷ்டி, ஏகாதசி ஆகிய நாட்களில் சங்கு வைக்கக் கூடாது. சனி, ஞாயிறு, செவ்வாய் ஆகிய மூன்றுநாட்களில் சங்கு வைக்க ஆகாது.

சதயம், திருவோணம், உத்திரம், அஸ்தம், ரேவதி, சுவாதி, ரோகிணி, மிருகசீரிடம், சித்திரை, பூரம், புனர் பூசம், அனுஷம், அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் சங்கு வைக்க ஏற்றவை.

இப்படிச் சங்கு வைக்க ஏற்றவை என மேலே கூறிய நாள், நட்சத்திரம், காலங்கள் வீட்டிற்கான கடைக்கால் எடுக்கவும் சிறந்தவை ஆக அமையக்கூடும் எனக்கொள்ளலாம்.