பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

75

வர்கள் நோயால் துன்புற்று மருத்துவச் செலவுகள் ஏற்பட்டபடி இருக்கும்.

இக்காலத்தில் எந்த இடத்தில் நிலத்தடி நீர் நன்றாயிருக்கும் என்று காணும் நீரறி நிபுணர் (Water Divine) போல் அக்காலத்திலும் கண்டறிய ஏற்பாடுகள் இருந்தன வீட்டில் கிணறு வெட்டும் யோகமுள்ள திசையில் பசுவின் கன்று ஒன்றை இட்டுச் செல்ல வேண்டும், கன்றிற்குப் பூவும் சந்தனமும் இட்டு வழிபட்டபின் அதன் கழுத்துக் கயிற்றைப் பற்றியபடி மனைக்குரியவர் நிற்க வேண்டும். சிறிது நேரம் கழித்துக் கன்று எப்பக்கம் போக முனைகிறதோ அப்பக்கம் விட்டுவிட வேண்டும். விடுபட்டுப் போன கன்று எங்கு சென்று நின்று கோமியம் (கோமூத் திரம்) கழிக்கிறதோ அந்த இட்த்தில் பூமிக்குள் நல்ல நீரோட்டம் இருக்கும் என்று உய்த்துக்கொண்டு அகழ வேண்டும். பசுவின் கன்று சிறுநீர் கழித்த இடத்தினை அகழ்ந்தால் நல்ல நீரோட்டமும் ஊற்றும் கீழிருக்கும் என்பது நம்பிக்கை. இவ்வாறு நிகழாமல் பசுவின் கன்று ஒரிடத்தில் நின்று சாணம் கழிக்குமாயின் அவ்விடத்தில் கீழே அகழ்ந்து பார்த்தால் கற்பாறைகள் இருக்கும் என்பதும் நம்பிக்கை. அப்படிப்பட்டஇடத்தில் கிணறு அகழ்ந்தால் அல்லலும் துன்பமும் நேரும், வீட்டின் வாசற்படிகளின் எண்ணிக்கை ஒற்றைப்படையாக இருப்பதே நல்லது. வீட்டின் நான்கு திசைகளிலும் வாசற்கால்கள் வைக்கப்பட்ட வீட்டில் அதிக அநுகூலங்கள் உண்டாகும் என்பது முன்னோர் நம்பிக்கை. 63

ஆனால் வடக்குப் பக்கம் வாசல் இல்லாமல் மற்ற மூன்று பகுதிகளில் வாசல்கால் வைப்பது அரசனின் கோபத்தையும் தொல்லைகளையும் தரும்.

மேற்குப் பகுதி வாசல் இல்லாமல் மற்ற மூன்று பகுதிகளில் வாசல் வைப்பது முன்னேற்றம், செல்வச் சேர்க்கை அனைத்தையும் உண்டாக்கும்.