பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


காணத்தக்கது. நூலாவது 'கிருஹ நிர்மாண சாஸ்திரம் 13(வீடு கட்டுதல் பற்றிய நூல்) என்பார் வை. மு. கோபால கிருஷ்ணமாசாரியார்.

கட்டட மரபுகள்

இந்நெடுநல்வாடை பகுதியால் தெரியவரும் கட்டடக் கலைத் தொடர்பான பழக்க வழக்கங்களும் பண்பாடுகளும் கூர்ந்து கவனிக்கத் தக்கவை.

1) கதவு முகப்பில் குவளைப்பூ ஏந்திய இரு பெண் யானைகளினிடையே திருமகள் தோற்றம் அமைப்பது மங்கலமாகக் கருதப்பட்டது. 14

2) நிலைப்படியில் வெண்றிறுகடுகு அரைத்து நெய் கலந்து அப்புகிற பழக்கம் மரபாயிருந்தது. 15

3) முற்றத்தில் மணல் பரப்புவது வழக்கமாயிருந்தது. 16

ஆணிகளும் பட்டங்களுமாகிய பெரிய இரும்புகளாலே கட்டப்பட்டுச் செவ்வரக்கு வழித்துத் தாழ்ப்பாள் பொருத்திய இரண்டாய் மாட்சிமைப்பட்ட கதவைச் சேர்த்தி உத்தரமென்னும் நாளின் பெயர் பெற்ற சிறப்பமைந்த உத்தரக்குறுக்குக் கட்டையை வைத்துப் பிடி ஏந்திய குவளைப் பூவுடன் இடையே திருவிளங்க நிலை ஏற்பாடு செய்து கைத்தொழில் வல்ல தச்சன் இடைவெளி தெரியாது இணைத்த மரயாப்பின் வெண் சிறுகடுகும் நெய்யும் அணிந்த படியில் எழுகின்ற கொடியுடன் யானை புகும் மலையை நடுவே திறந்தாற் போன்ற கோபுர வாயில் என்று நெடுநல்வாடை அரசனின் கோயிலை விவரிக்கிறது.

உத்தரத்துக்கும் நிலைக்கும் மரங்களைப் பயன்படுத்தினர் என்பதையும் பல மரங்களைச்சந்து தெரியாமல் இணைத்து இழைப்பது உண்டென்பதையும், கோயில்கள் போல் அரசன் அரண்மனைக்கும் கோபுர வாயில் உண்டு