இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
52
பவள மல்லிகை.
ாண்டன. நீ பிள்ளைத்தாய்ச்சியின்னு தெரிஞ்சிருந்தா இவ்வளவு நேரம் நிறுத்தி வச்சிருக்கமாட்டேன். போய்க் குழந்தைக்குப் பால் குடு."
முறக்காரி ஆச்சரியப்படுவது கிடக்கட்டும்; எனக்கே ஆச்சரியமாகிவிட்டது. அம்மாவா, இவ்வளவு பேரத்துக் குப்பின் அவள் கூறின விலையையே கொடுத்து விட்டாள் :
ஆம்! உண்மை. குழந்தையின் மேல் முறக்காரிக்கு இருந்த பாசம் தூய்மையானது. அது என் தாயின் உள் ளத்தை உருக்கி விட்டது. அவளும் தாய் அல்லவா? அவளுக்கும் அந்தப் பாசம் இருக்கிறதென்பதை நானல் லவா அறிவேன்?