பக்கம்:பவள மல்லிகை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

பவள மல்லிகை.

ாண்டன. நீ பிள்ளைத்தாய்ச்சியின்னு தெரிஞ்சிருந்தா இவ்வளவு நேரம் நிறுத்தி வச்சிருக்கமாட்டேன். போய்க் குழந்தைக்குப் பால் குடு."

முறக்காரி ஆச்சரியப்படுவது கிடக்கட்டும்; எனக்கே ஆச்சரியமாகிவிட்டது. அம்மாவா, இவ்வளவு பேரத்துக் குப்பின் அவள் கூறின விலையையே கொடுத்து விட்டாள் :

ஆம்! உண்மை. குழந்தையின் மேல் முறக்காரிக்கு இருந்த பாசம் தூய்மையானது. அது என் தாயின் உள் ளத்தை உருக்கி விட்டது. அவளும் தாய் அல்லவா? அவளுக்கும் அந்தப் பாசம் இருக்கிறதென்பதை நானல் லவா அறிவேன்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/58&oldid=592037" இலிருந்து மீள்விக்கப்பட்டது