இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
திருமகள் திருமக ளேஉன் திருவடி பணிவோம். அருள்தனை வேண்டி அனுதினம் தொழுவோம். வளமெலாம் எங்கள் வாழ்வினில் சேர்ப்பாய். விளைந்திட நலங்கள் வெற்றி நீ அருள்வாய். பொன்னேயும் பொருளையும் புவியினுக் களிப்பாய். நின்னருள் பெற்றே நிலத்திடச் செய்வாய். பஞ்சமும் பசியும் பாரினில் ஒழிப்பாய். தஞ்சமென் றுன்றன் தாள்பணிந் தோமே! 33