இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஒன்பது விளக்குகள் ஏற்றிவைத்தோம் ஒளியினைச் சுற்றிலும் நாம்அமர்ந்தோம் அன்னையின் திருவருள் பெறவேண்டி அனைவரும் சேர்ந்து பாடிடுவோம். அம்மன் சன்னதி முன்னுலே அருள் ஒளி பரவும் வேளையிலே நம்மைக் காத்திடும் தேவியிடம் நன்மை பெருக வேண்டிடுவோம். இருளே அகற்றிடும் ஒளியேபோல் இதயந் தன்னைச் சூழ்ந்துள்ள கருமை முற்றிலும் அருள்ஒளியில் கரைந்தே மறைய வேண்டிடுவோம். நாட்டை ஆளும் பொறுப்பினையே நாளை ஏற்கப் போகின்ற வீட்டு விளக்காம் குழந்தையெலாம் மேன்மை பெறஅருள் வேண்டிடுவோம். 35