இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வயலில் விளைச்சல் பெருகிடவே மா, பலா, வாழை செழித்திடவே செயல்கள் யாவும் சிறந்திடவே தேவியின் திருவருள் வேண்டிடுவோம். ஊருணி குளங்கள் நிறைந்திடவே ஊரார் எல்லாம் மகிழ்ந்திடவே சீருடன் சிறப்புடன் திகழ்ந்திடவே தேவியின் பேரருள் வேண்டிடுவோம். நல்லவ ராக விளங்கிடவே நலங்கள் பலவும் பெருகிடவே வல்லமை பெற்று வாழ்ந்திடவே மலரடி போற்றி வணங்குகிருேம், 36