பக்கம்:பாடிப் பணிவோம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐங்கரனே, ஒம், ஐங்கரனே, அனைத்திலும் முந்தி இருப்பவனே! அறுமுகனே, ஒம், அறுமுகனே, அன்பருக் கின்பம் அருள்பவனே! சங்கரனே, ஒம், சங்கரனே, சரணடைந் தோரைக் காப்பவனே! உமையவளே, ஒம், உமையவளே, உலகத் தாயாய்த் திகழ்பவளே! கலைமகளே, ஒம், கலைமகளே, கல்விக் கதிபதி யானவளே! திருமகளே, ஒம், திருமகளே, செல்வமும் அழகும் தருபவளே! தினம் தினம் நாங்கள் தொழுவோமே. திருவருள் தன்னைப் பெறுவோமே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடிப்_பணிவோம்.pdf/43&oldid=811443" இலிருந்து மீள்விக்கப்பட்டது