பக்கம்:பாடுங்குயில்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழுங் கவிஞன்

l 2 /な・バイス必

கனவுகள் காண்பான் கவிஞன்-ஆளுல் கண்விழி உறங்குவ தில்லை நனவுகள் ஆகும் புவியில்-அவனே நன்மைகள் தொடர்வது மில்லை

பஞ்சணை போலொரு நினைவு-அங்கே பகிலிர வெல்லாங் கனவு நெஞ்சினில் ஊறிடுந் தினவு-அதுதான் நீள்புகழ்க் காவியப் புனைவு

மதியொடு முகிலொடு மிதப்பான்-அந்த மயக்கினில் நாள்பல கிடப்பான் -- புதியன புனைந்திடத் துடிப்பான்-அந்தப் போதையில் ஆயிரம் படைப்பான்

மழலைகள் பேசிடும் மதலை-காணின்

மகிழ்ந்திடும் அவைெரு மதலே பழகிய யாழொடு குழலைக்-கேட்டால் பாவலன் ஏழிசை நிழலே

96

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/100&oldid=593975" இலிருந்து மீள்விக்கப்பட்டது