பக்கம்:பாடுங்குயில்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிறமலர் மணமுடன் குலுங்கும்-கவிஞன் நெஞ்சொரு வண்டென மயங்கும் பறவைக ளாயிரம் பறக்கும்-கவிஞன் பறந்திடச் சிறகினை விரிக்கும்

இயற்கையின் அழகுகள் சிரிக்கும்-அவற்றுள் இணைந்தவன் நரம்புகள் துடிக்கும் மயக் குறும் உணர்வுகள் நடிக்கும்-கவிஞன் வாயித ழோக வி உதிர்க்கும்

எளியவர் விழிபுனல் சிந்தும்-காணின் இனந்தெரி யாது.க லங்கும் நெளிகடல் போலுளம் பொங்கும்-துயரை நீக்கிடப் பாடல்வ ழங்கும்

கொடுமைகள் கண்டுளம் வாடும்-உணர்வு கூடிட வாய் கவி பாடும்

படுமிடர் நீங்கிட ஆடும்-ஆஞல்ை பாவலன் துயர்தான் நீடும்

தோயுறும் துயரிடை வாழும்-அந்தத் து.ாய வன் சுழலு வன் நாளும் ஆயினும் கற்பனை சூழும்-அவன் கவி ஆயிரம் ஆண்டுகள் வாழும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/101&oldid=593976" இலிருந்து மீள்விக்கப்பட்டது