இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பொற்புறு கிண்ணியில் பூமனத் தேறலைப்
பூவையர் பற்பலர் ஊற்றிடுவார்
பூங்கொடி போலிடை தாங்கிடு வார் மனம்
பொங்கிட வேவெறி ஏற்றிடுவார்
மூண்டிடும் அவ்வெறி மூளையி லேவந்து மொய்ம்புறச் சுற்றிவ ளைத்திடும்ே முத்தமிழ்ப் பாடல்கள் மோதி மனத்தினில்
முந்துற வந்துவி 2ளத்திடுமே ஈண்டிய மாதரில் ஏந்தெழில் கொண்டவள்
என்னுடல் மெல்லென நீவிடுவாள் o இன்புறும் பூம்பொழில் தங்கிடும் மாங்குயில்
என்னவே பாவினில் கூவிடுவேன்
பாட்டைமு டித்துடன் ஏட்டினை மூடலும்
பாழுல கில்விழி பட்டதடா! பாடிய யாழிசை ஆடிய மாமயில்
பாவையர் ஆடலும் கெட்டதடா! விட்டைவ ளைத்திடும் வேதனை சூழ்ந்தெனை
வெந்துளம் வாடிடச் சுட்டதடா! வெட்டவெ ளிக்கடல் வீழ்ந்துகி டந்துயிர்
வெம்பிட வேவிழி சொட்டுதடா!
105