பக்கம்:பாடுங்குயில்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொற்புறு கிண்ணியில் பூமனத் தேறலைப்

பூவையர் பற்பலர் ஊற்றிடுவார்

பூங்கொடி போலிடை தாங்கிடு வார் மனம்

பொங்கிட வேவெறி ஏற்றிடுவார்

மூண்டிடும் அவ்வெறி மூளையி லேவந்து மொய்ம்புறச் சுற்றிவ ளைத்திடும்ே முத்தமிழ்ப் பாடல்கள் மோதி மனத்தினில்

முந்துற வந்துவி 2ளத்திடுமே ஈண்டிய மாதரில் ஏந்தெழில் கொண்டவள்

என்னுடல் மெல்லென நீவிடுவாள் o இன்புறும் பூம்பொழில் தங்கிடும் மாங்குயில்

என்னவே பாவினில் கூவிடுவேன்

பாட்டைமு டித்துடன் ஏட்டினை மூடலும்

பாழுல கில்விழி பட்டதடா! பாடிய யாழிசை ஆடிய மாமயில்

பாவையர் ஆடலும் கெட்டதடா! விட்டைவ ளைத்திடும் வேதனை சூழ்ந்தெனை

வெந்துளம் வாடிடச் சுட்டதடா! வெட்டவெ ளிக்கடல் வீழ்ந்துகி டந்துயிர்

வெம்பிட வேவிழி சொட்டுதடா!

105

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/109&oldid=593984" இலிருந்து மீள்விக்கப்பட்டது