பக்கம்:பாடுங்குயில்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பவர் செயலா?

gー勢ー7%ク今

கட்டிளங் காளையரே-உம்மைக்

கண்டிடும் வேளையிலே

மட்டிலா வேதனையால்-உள்ளம்

வாடிக் கலங்குகின்றேன்

நட்ட நடுத்தெருவில்-நீங்கள்

நாலைந்து பேர்கலந்து

கட்டுக் கடங்காமல்-நின்று

கத்திப் பிதற்றுகின்றீர்!

ஏறிய வண்டிகளில்-நீங்கள்

ஏழெட்டுப் பேர்நெருங்கிக்

கூறும் வரிசையிலே-தோளைக்

கோத்துத் திரிந்திடுவீர்!

பேருந்தில் ஏறிவிட்டால்-அங்கே

பேயாட்டம் ஆடுகின்றீர்

ஆரும் வெறுத்திடவே-நீங்கள்

ஆர்த்து முழக்குகின்றீர்!

106

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/110&oldid=593985" இலிருந்து மீள்விக்கப்பட்டது