இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கற்பவர் செயலா?
gー勢ー7%ク今
尝
கட்டிளங் காளையரே-உம்மைக்
கண்டிடும் வேளையிலே
மட்டிலா வேதனையால்-உள்ளம்
வாடிக் கலங்குகின்றேன்
நட்ட நடுத்தெருவில்-நீங்கள்
நாலைந்து பேர்கலந்து
கட்டுக் கடங்காமல்-நின்று
கத்திப் பிதற்றுகின்றீர்!
ஏறிய வண்டிகளில்-நீங்கள்
ஏழெட்டுப் பேர்நெருங்கிக்
கூறும் வரிசையிலே-தோளைக்
கோத்துத் திரிந்திடுவீர்!
பேருந்தில் ஏறிவிட்டால்-அங்கே
பேயாட்டம் ஆடுகின்றீர்
ஆரும் வெறுத்திடவே-நீங்கள்
ஆர்த்து முழக்குகின்றீர்!
106