பக்கம்:பாடுங்குயில்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடக வேடங்கள்போல்-தலையில்

நார்முடி காட்டுகின்றீர்!

ஆடவர் பெண்டிரெனத்-தோன்ரு

ஆடையை மாட்டுகின்றீர்!

அன்ன நடையினர்தாம்-செல்லும்

ஆவண வீதிகளில்

என்னென்ன வேடிக்கைகள்-செய்வீர்

ஏளனக் கூக்குரலால்

மங்கையர் வீதிகளில்-நட்ந்து

வந்திட அஞ்சுகின்ருர்

உங்க ளுடன்பிறந்த-பெண்ணும்

உண்டென எண்ணிடுவீர்!

கற்பவர் செய்கையிதோ-நாட்டைக்

காப்பவர் நீவிரன்ருே?

நெற்பயிர் காண் வயலில்-களைகள்

நீக்கிட முன்வருவீர்!

107

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/111&oldid=593986" இலிருந்து மீள்விக்கப்பட்டது