இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நாடக வேடங்கள்போல்-தலையில்
நார்முடி காட்டுகின்றீர்!
ஆடவர் பெண்டிரெனத்-தோன்ரு
ஆடையை மாட்டுகின்றீர்!
அன்ன நடையினர்தாம்-செல்லும்
ஆவண வீதிகளில்
என்னென்ன வேடிக்கைகள்-செய்வீர்
ஏளனக் கூக்குரலால்
மங்கையர் வீதிகளில்-நட்ந்து
வந்திட அஞ்சுகின்ருர்
உங்க ளுடன்பிறந்த-பெண்ணும்
உண்டென எண்ணிடுவீர்!
கற்பவர் செய்கையிதோ-நாட்டைக்
காப்பவர் நீவிரன்ருே?
நெற்பயிர் காண் வயலில்-களைகள்
நீக்கிட முன்வருவீர்!
107