பக்கம்:பாடுங்குயில்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோள்கள் மலையென நிமிர்ந்தன-நெஞ்சில்

துாய்மைத் துணிவுகள் வளர்ந்தன

நாள்கள் மகிழ்வுறப் பிறந்தன-எண்ணம்

நாட்டின் பணியிடை விரிந்தன

கோலத் தமிழ்மொழி உயர்ந்திட-நெஞ்சம்

கூவிக் குரல்தரும் வளர்ந்திட

ஞாலத் தொருபகை எழுந்திடின்-அப்பகை

நாணிப் புறமிட முழங்கிடும்

வாழத் தரையினில் பிறந்தவர்-அந்தோ

வாடிப் புழுவென வதங்கினர்

நாளை அவர்துயர் தொலைந்திடப்-பாடல்

நாளும் கணைகளை வழங்கிடும்

நாட்டின் தொழிலிடை முனைந்தவர்-வாழ

நாளும் உழவுகள் புரிந்தவர்

வாட்டும் வறுமையில் உழன்றனர்-மீள

வாளென என்கவி சுழன்றிடும்

115

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/119&oldid=593994" இலிருந்து மீள்விக்கப்பட்டது