இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தோள்கள் மலையென நிமிர்ந்தன-நெஞ்சில்
துாய்மைத் துணிவுகள் வளர்ந்தன
நாள்கள் மகிழ்வுறப் பிறந்தன-எண்ணம்
நாட்டின் பணியிடை விரிந்தன
கோலத் தமிழ்மொழி உயர்ந்திட-நெஞ்சம்
கூவிக் குரல்தரும் வளர்ந்திட
ஞாலத் தொருபகை எழுந்திடின்-அப்பகை
நாணிப் புறமிட முழங்கிடும்
வாழத் தரையினில் பிறந்தவர்-அந்தோ
வாடிப் புழுவென வதங்கினர்
நாளை அவர்துயர் தொலைந்திடப்-பாடல்
நாளும் கணைகளை வழங்கிடும்
நாட்டின் தொழிலிடை முனைந்தவர்-வாழ
நாளும் உழவுகள் புரிந்தவர்
வாட்டும் வறுமையில் உழன்றனர்-மீள
வாளென என்கவி சுழன்றிடும்
115