பக்கம்:பாடுங்குயில்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாளும் உழைப்புகள் பெருகும்-கொடும் நச்சுச் சுரண்டலும் கருகும் பாழும் அடைப்புகள் கடியும்-மிடி பற்றிய வெந்துயர் மடியும்

o -அதோ ஏற்றமும் தாழ்ச்சியும் இரியும்-மக்கள் யாவரும் ஒன்றெனத் தெரியும் மாற்றமெ லாமொரு புதுமை-செல்வம் மாந்தர்கள் யாவர்க்கும் பொதுமை

-அதோ

கோபுர வாயில்கள் தெரியும்-அவை கோவில்க ளாமெனல் மறையும் ஆபயன் யாவையும் விளையும்-அவை யாவரும் போய்வரும் நிலையம்

-அதோ பேதைமை முற்றிலும் அழியும்-அங்குப் பெண்ணின வாழ்வுகள் தழையும் ஒதுநல் ஞானமும் ஒளிரும்-அவர் ஒர்நிக ராமெனல் மிளிரும்

-அதோ பண்புகள் யாவையும் மலரும்-அமைதி பாங்குற எங்கனும் படரும் கண்கொளும் காட்சிகள் வளரும்-மனம்

காவிரி யாமென மகிழும்.

-அதோ

-— SMMMS SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS -

. معا نیا 29ء ے 2 / a 7٫50مہ Pیخی

117

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/121&oldid=593996" இலிருந்து மீள்விக்கப்பட்டது