பக்கம்:பாடுங்குயில்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்படிப் பொறுப்பேன்?

இருளுடன் ஒளியையுங் காண்பேன் - உலகின்

இயல்பெனும் மனநிலை பூண்பேன்

வறுமையும் வளமையுங் கண்டால் - மாந்தன்

வாழ்வினில் எப்படிப் பொறுப்பேன்?

மருதமும் பாலையும் உண்டு - விடுவேன் மண்மிசை இயல்பெனக் கொண்டு

உரியவன் எளியவன் இருத்தல் - இயல்பென் றுரைத்திடின் எப்படிப் பொறுப்பேன்?

தடமலை சமதரை இருக்கும் - அவையும் தரைதனில் இயல்பென இருப்பேன் குடிலுடன் மாளிகை இருப்பின் - நெஞ்சம்

குமுரு தெப்படி யிருக்கும்?

பூவுடன் பிஞ்சுகள் மடியும் - அஃதும்

பூமியில் இயல்பென முடியும் சாவுகள் இளமையைத் தொடரின் - உள்ளம்

சமநிலை எப்படி யடையும்?

10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/14&oldid=593883" இலிருந்து மீள்விக்கப்பட்டது