இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எப்படிப் பொறுப்பேன்?
米
இருளுடன் ஒளியையுங் காண்பேன் - உலகின்
இயல்பெனும் மனநிலை பூண்பேன்
வறுமையும் வளமையுங் கண்டால் - மாந்தன்
வாழ்வினில் எப்படிப் பொறுப்பேன்?
மருதமும் பாலையும் உண்டு - விடுவேன் மண்மிசை இயல்பெனக் கொண்டு
உரியவன் எளியவன் இருத்தல் - இயல்பென் றுரைத்திடின் எப்படிப் பொறுப்பேன்?
தடமலை சமதரை இருக்கும் - அவையும் தரைதனில் இயல்பென இருப்பேன் குடிலுடன் மாளிகை இருப்பின் - நெஞ்சம்
குமுரு தெப்படி யிருக்கும்?
பூவுடன் பிஞ்சுகள் மடியும் - அஃதும்
பூமியில் இயல்பென முடியும் சாவுகள் இளமையைத் தொடரின் - உள்ளம்
சமநிலை எப்படி யடையும்?
10