இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மலர் தனிற் பனிநீர் குந்தும் - அதுதான்
மனமகிழ் அழகினைச் சிந்தும்
உலரிய விழிநீர் சிந்தின் - என்றன்
உளமோ கடலெனப் பொங்கும்
விரித்திடும் தோகையின் கண்கள் - காணின்
விஅளத்திடும் என்மனம் பண்கள்
தரித்திடும் ஆடையிற் கண்கள் - காணின்
தலைக்கொளும் ஆயிரம் புண்கள்
முழுமதி வடிவினில் குறையும் - அதுவும்
முழுமையும் ஒருநாள் மறையும்
உழுபவன் வடிவினில் குறையின் - என்றன்
உளமோ கனலாய்ப் புகையும்
பசியுடன் நலிவுகள் மிகுத்தால் - இங்கே
பாய்புலி யாய்மணஞ் சினக்கும்
இசையா வுலகினைப் படைத்தால் - இனியும்
எப்படி என்மனம் பொறுக்கும்?
11.