இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மூடம் என்று மாறுமோ!
கடவுள் கடவுள் என்கிருய் - நாளுங்
கயமை யாவுஞ் செய்கிருய்
மடமை நோக்கிச் செல்கிருய் - நல்ல
மதியை அந்தோ கொல்கிருய்
கல்வி தெய்வம் என்கிருய் - நாளுங்
கற்க என்ன செய்கிருய்?
செல்வந் தெய்வம் என்கிருய் - அதனைத்
தேடத் தீமை செய்கிருய்
சின்னம் உன்றன் மெய்யிலே - செய்யுஞ்
செயல்கள் எல்லாம் பொய்யிலே
சொன்ன வேதங் கையிலே - வஞ்சம்
சூது நெஞ்சப் பையிலே
எத்தி வாழப் பார்க்கிருய் - அதனுள் இறைவன் பேரைச் சேர்க்கிருய்
கொத்துங் கழுகுப் போக்கினுல் - உன்றன்
கொள்கை நன்மை யாக்குமோ?
12