பக்கம்:பாடுங்குயில்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூடம் என்று மாறுமோ!

கடவுள் கடவுள் என்கிருய் - நாளுங்

கயமை யாவுஞ் செய்கிருய்

மடமை நோக்கிச் செல்கிருய் - நல்ல

மதியை அந்தோ கொல்கிருய்

கல்வி தெய்வம் என்கிருய் - நாளுங்

கற்க என்ன செய்கிருய்?

செல்வந் தெய்வம் என்கிருய் - அதனைத்

தேடத் தீமை செய்கிருய்

சின்னம் உன்றன் மெய்யிலே - செய்யுஞ்

செயல்கள் எல்லாம் பொய்யிலே

சொன்ன வேதங் கையிலே - வஞ்சம்

சூது நெஞ்சப் பையிலே

எத்தி வாழப் பார்க்கிருய் - அதனுள் இறைவன் பேரைச் சேர்க்கிருய்

கொத்துங் கழுகுப் போக்கினுல் - உன்றன்

கொள்கை நன்மை யாக்குமோ?

12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/16&oldid=593885" இலிருந்து மீள்விக்கப்பட்டது