பக்கம்:பாடுங்குயில்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுந் தீமை யாவுமே - அந்தத்

தேவன் என்ருல் தீருமோ? பொய்யும் மெய்ம்மை யாகுமோ? - காட்டுப்

பூனை புலியென் ருகுமோ?

நூறு நூறு சாதிகள் - இங்கு

துவலுங் கோடி வீதிகள் வேறு வேறு நீதிகள் - சொல்லி * வேத மென்றும் ஒதிளுய்

ஏழை செல்வன் ஏனெனில் - அந்த

இறைவன் என்று வீணிலே மோழை வாதங் கூறிய்ை - உன்றன்

மூடம் என்று மாறுமோ?

நெஞ்சின் மாசை ஒட்டுவாய் - நல்ல

நினைவை யங்கே கூட்டுவாய் வஞ்சம் நீக்கி வீட்டுவாய் - செய்கை

வாய்மை யாக்கிக் காட்டுவாய்

13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/17&oldid=593886" இலிருந்து மீள்விக்கப்பட்டது