இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நாளுெரு பாடும் பறவை.
நாளுெரு பாடும் பறவை - பொழிவேன்
நாடொறும் பாடல் நறவை
வானில்வி ரிப்பேன் சிறகை - மறவேன்
வாழ்ந்திடும் மண்ணின் உறவை
பாடுவ தென்றன் தொழிலாம் - அன்பும்
பண்பும் என திரு விழியாம்
கூடிடும் நட்பெனும் மழையில் - நாளும் குளித்துளம் மகிழ்வதென் வழியாம்
சிந்தனை விரிசிற குடையேன் - காற்றுச்
சீறிடல் கண்டுளம் உடையேன்
முந்திய தமிழிசை நடையில் - கவிதை
மொய்ம் புறப் பாடுதல் உடையேன்
கொள்கை கொணர்ந்ததை முடைவேன்-அந்தக்
கூட்டினில் வந்தே அடைவேன்
தெள்ளிய தமிழ் மழை விழைவேன் - என்றும்
தித்தித் திடஇசை பொழிவேன்
14