இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஈயென எதிலும் அமரேன் - நறுமலர்
எதுவோ அதையே நுகர்வேன்
வாயினில் வந்ததை உளறேன் - துன்பம்
வாய்த்திடின் அதனுல் தளரேன்
வாழ்வினைப் பெரிதாக் கருதேன் - என்றும்
வாய்மையை மீறித் திரியேன்
தாழ்விலுஞ் செம்மைக் குரியேன் - என்றன்
தாயகங் காக்குங் குறியேன்
விண்மிசை யாண்டுந் திரிவேன் - அங்கே
விந்தைகள் ஆயிரம் புரிவேன்
மண்மிசை என்றும் வருவேன் - இன்பம்
மாநிலம் எய்திடத் தருவேன்
பாடிடு வேன்புது வுலகை - அங்கே
படைத்திடு வேன்பொது வுடைமை
சாடிடு வேன்வரும் படையைத் - தாக்கிச்
சமர்புரி வேன்.அது கடமை