பக்கம்:பாடுங்குயில்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒற்றுமையா? ஒருமைப்பாடா?

ஒற்றுமை என் ருெரு சொல்லுண்டு-மேலும்

ஒருமைப் பாடென ஒன்றுண்டு சற்றே அவற்றின் பொருள் கண்டு-நின்பால்

சாற்றிடு வே ைகேள் மனங்கொண்டு

கட்டிய மாலைகள் தொங்கும்பார்-அவற்றில்

கண்கவர் பூக்கள்வி ளங்கும்பார்

மொட்டுடன் முல்லைது லங்கும்பார்-இன்னும்

மூவகைப்பூவுமி லங்கும் பார்

எத்தனை எத்தனை வண்ணம்பார்-நெஞ்சில்

இன்பம் விளைந்திடப் பண்ணும்பார்

அத்தனை அத்தனை வண்ணப்பூ-மாலை ஆகிடச் சேர்ந்ததை எண்ணிப்பார்

மாலையிற் சேர்ந்தவை நின்ருலும்-தத்தம்

மணத்தோ டுறுபெயர் குன்ருமல்

கோலமுறத்தொடர்ந் தொன்ருகும்-இதுவே

கொண்டிடும் ஒற்றுமை என்ருகும்.

26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/30&oldid=593899" இலிருந்து மீள்விக்கப்பட்டது