இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஒற்றுமையா? ஒருமைப்பாடா?
ஒற்றுமை என் ருெரு சொல்லுண்டு-மேலும்
ஒருமைப் பாடென ஒன்றுண்டு சற்றே அவற்றின் பொருள் கண்டு-நின்பால்
சாற்றிடு வே ைகேள் மனங்கொண்டு
கட்டிய மாலைகள் தொங்கும்பார்-அவற்றில்
கண்கவர் பூக்கள்வி ளங்கும்பார்
மொட்டுடன் முல்லைது லங்கும்பார்-இன்னும்
மூவகைப்பூவுமி லங்கும் பார்
எத்தனை எத்தனை வண்ணம்பார்-நெஞ்சில்
இன்பம் விளைந்திடப் பண்ணும்பார்
அத்தனை அத்தனை வண்ணப்பூ-மாலை ஆகிடச் சேர்ந்ததை எண்ணிப்பார்
மாலையிற் சேர்ந்தவை நின்ருலும்-தத்தம்
மணத்தோ டுறுபெயர் குன்ருமல்
கோலமுறத்தொடர்ந் தொன்ருகும்-இதுவே
கொண்டிடும் ஒற்றுமை என்ருகும்.
26